புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்து வெற்றி பெற்ற அன்பே வா படத்தில் இடம் பெற்ற புதிய வானம் பாடல் அயல் நாட்டவர் பாடி நடித்த இந்த காட்சியை பாருங்கள்.
தகவல் பரிமாறியவர் எம்.ஜி.ஆர். பேரன் பிரதீப் பாலு.
Song
Monday, December 1, 2008
Sunday, March 9, 2008
இதயக்கனி
இதயக்கனி வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் 4.1.1976.
1975-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படைத்த படம் சத்யா மூவிஸின் இதயக்கனி இது தமிழ்ப் படவுலகுக்கு பெருமை. ஆகவே அப்படத்தை பாராட்டுவதிலோ கூச்சமோ, வெட்கமோ, தேவையில்லை. 1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.
தற்போதுள்ள வரி அமைப்பின்படி, எந்த தமிழ்ப்படமும் நீண்ட நாட்கள் ஓடுவதோ - லாபத்தை தருவதோ இயலாத சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இதயக்கனி மிகக் சிறந்த படமாக கடந்த ஆண்டில் வெற்றி படைத்திருக்கிறது என்றால் அதைப் பாராட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். 1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்.
நாள் 4.1.1976.
1975-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படைத்த படம் சத்யா மூவிஸின் இதயக்கனி இது தமிழ்ப் படவுலகுக்கு பெருமை. ஆகவே அப்படத்தை பாராட்டுவதிலோ கூச்சமோ, வெட்கமோ, தேவையில்லை. 1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.
தற்போதுள்ள வரி அமைப்பின்படி, எந்த தமிழ்ப்படமும் நீண்ட நாட்கள் ஓடுவதோ - லாபத்தை தருவதோ இயலாத சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இதயக்கனி மிகக் சிறந்த படமாக கடந்த ஆண்டில் வெற்றி படைத்திருக்கிறது என்றால் அதைப் பாராட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். 1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்.
Sunday, December 2, 2007
Sunday, July 29, 2007
எம்.ஜி.ஆர். நடித்த காவியங்கள்
136 படங்கள் அவர் நடித்தாலும் அவர் கதாநாயகனாக நடித்த படம் ராஜகுமாரி வெளியான ஆண்டு 1947, அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எண், வருடம், படம் பெயர், நாட்கள் என வாசிக்கவும்
1. 1947 ராஜகுமாரி 168 நாட்கள்
2. 1948 மோகினி 133 நாட்கள்
3. 1950 மருதநாட்டு இளவரசி 133 நாட்கள்
4. 1950 மந்திரிகுமாரி 151 நாட்கள்
5. 1951 மர்ம யோகி 151 நாட்கள்
6. 1951 சர்வாதிகாரி 142 நாட்கள்
7. 1952 அந்தமான் கைதி 133 நாட்கள்
8. 1952 குமாரி 112 நாட்கள்
9. 1952 என் தங்கை 352 நாட்கள்
10. 1953 நாம் 84 நாட்கள்

11. 1953 பணக்காரி 70 நாட்கள்
12. 1953 ஜெனோவா 133 நாட்கள்
13. 1954 மலைக்கள்ளன் 150 நாட்கள்
14. 1954 கூண்டுக்கிளி 77 நாட்கள்
15. 1955 குலேபகாவலி 166 நாட்கள்
16. 1956 அலிபாபாவும் 40 திருடர்களும் 168 நாட்கள்
17. 1956 மதுரை வீரன் 180 நாட்கள்
18. 1956 தாய்க்குப் பின் தாரம் 161 நாட்கள்
19. 1957 சக்கரவர்த்தி திருமகள் 140 நாட்கள்
20. 1957 ராஜராஜன் 77 நாட்கள்

21. 1957 புதுமைப்பித்தன் 112 நாட்கள்
22. 1957 மகாதேவி 117 நாட்கள்
23. 1958 நாடோடி மன்னன் 200 நாட்கள்
24. 1959 தாய்மகளுக்கு கட்டிய தாலி 86 நாட்கள்
25. 1960 பாக்தாத் திருடன் 112 நாட்கள்
26. 1960 ராஜாதேசிங்கு 77 நாட்கள்
27. 1960 மன்னாதி மன்னன் 93 நாட்கள்
28. 1961 அரசிளங்குமரி 92 நாட்கள்
29. 1961 திருடாதே 161 நாட்கள்
30. 1961 நல்லவன் வாழ்வான் 84 நாட்கள்
31. 1961 சபாஷ் மாப்பிளே 70 நாட்கள்
32. 1961 தாய் சொல்லைத் தட்டாதே 133 நாட்கள்
33. 1962 ராணி சம்யுக்தா 70 நாட்கள்
34. 1962 மாடப்புறா 77 நாட்கள்
35. 1962 தாயைக் காத்த தனையன் 140 நாட்கள்

36. 1962 குடும்பத்தலைவன் 108 நாட்கள்
37. 1962 பாசம் 84 நாட்கள்
38. 1962 விக்கிரமாதித்தன் 79 நாட்கள்
39. 1963 பணத்தோட்டம் 84 நாட்கள்
40. 1963 கொடுத்து வைத்தவள் 91 நாட்கள்
41. 1963 தர்மம் தலைக்காக்கும் 117 நாட்கள்

எண், வருடம், படம் பெயர், நாட்கள் என வாசிக்கவும்
1. 1947 ராஜகுமாரி 168 நாட்கள்
2. 1948 மோகினி 133 நாட்கள்
3. 1950 மருதநாட்டு இளவரசி 133 நாட்கள்
4. 1950 மந்திரிகுமாரி 151 நாட்கள்
5. 1951 மர்ம யோகி 151 நாட்கள்
6. 1951 சர்வாதிகாரி 142 நாட்கள்
7. 1952 அந்தமான் கைதி 133 நாட்கள்
8. 1952 குமாரி 112 நாட்கள்
9. 1952 என் தங்கை 352 நாட்கள்
10. 1953 நாம் 84 நாட்கள்

11. 1953 பணக்காரி 70 நாட்கள்
12. 1953 ஜெனோவா 133 நாட்கள்
13. 1954 மலைக்கள்ளன் 150 நாட்கள்
14. 1954 கூண்டுக்கிளி 77 நாட்கள்
15. 1955 குலேபகாவலி 166 நாட்கள்
16. 1956 அலிபாபாவும் 40 திருடர்களும் 168 நாட்கள்
17. 1956 மதுரை வீரன் 180 நாட்கள்
18. 1956 தாய்க்குப் பின் தாரம் 161 நாட்கள்
19. 1957 சக்கரவர்த்தி திருமகள் 140 நாட்கள்
20. 1957 ராஜராஜன் 77 நாட்கள்

21. 1957 புதுமைப்பித்தன் 112 நாட்கள்
22. 1957 மகாதேவி 117 நாட்கள்
23. 1958 நாடோடி மன்னன் 200 நாட்கள்
24. 1959 தாய்மகளுக்கு கட்டிய தாலி 86 நாட்கள்
25. 1960 பாக்தாத் திருடன் 112 நாட்கள்
26. 1960 ராஜாதேசிங்கு 77 நாட்கள்
27. 1960 மன்னாதி மன்னன் 93 நாட்கள்
28. 1961 அரசிளங்குமரி 92 நாட்கள்
29. 1961 திருடாதே 161 நாட்கள்
30. 1961 நல்லவன் வாழ்வான் 84 நாட்கள்
31. 1961 சபாஷ் மாப்பிளே 70 நாட்கள்
32. 1961 தாய் சொல்லைத் தட்டாதே 133 நாட்கள்
33. 1962 ராணி சம்யுக்தா 70 நாட்கள்
34. 1962 மாடப்புறா 77 நாட்கள்
35. 1962 தாயைக் காத்த தனையன் 140 நாட்கள்

36. 1962 குடும்பத்தலைவன் 108 நாட்கள்
37. 1962 பாசம் 84 நாட்கள்
38. 1962 விக்கிரமாதித்தன் 79 நாட்கள்
39. 1963 பணத்தோட்டம் 84 நாட்கள்
40. 1963 கொடுத்து வைத்தவள் 91 நாட்கள்
41. 1963 தர்மம் தலைக்காக்கும் 117 நாட்கள்
Tuesday, June 12, 2007
ஆயிரத்தில் ஒருவனின்' அட்டகாசம்
மையம் முலமாக கிடைத்த தகவல்
சொடுக்கவும் http://tamil.cinesouth.com/masala/hotnews/new/04062007-3.shtml
சொடுக்கவும் http://tamil.cinesouth.com/masala/hotnews/new/04062007-3.shtml
Sunday, June 3, 2007
ஆயிரத்தில் ஒருவன்
தினமலர் 3.6.2007
எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தை காண தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இத்திரைப் படம் நேற்று மூன்று தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அன்னை ஆபிராமி தியேட்டரில் இப்படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இப்படத்தை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் இப்படத்தை காண வந்திருந்தனர். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு வெளியே டிஜிட்டல் பேனர்களையும் வைத்திருந்தனர்.

இப்படத்தை காண வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த என்.சந்திரபாபு என்பவர் கூறுகையில், கடந்த 1966 ஆம் ஆண்டு மேகலா தியேட்டரில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை 100 முறைக்கும் மேல் இப்படத்தை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு அலுக்கவே இல்லை. இத்தியேட்டரில் இருந்து இப்படத்தை மாற்றுவதற்குள் 10 முறையாவது பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன் என்றார்.
தாமஸ் மலையை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் கூறுகையில் 'என்னிடம் இப்படத்தின் சிடி இருக்கிறது. இருந்தாலும் மற்ற ரசிகர்களோடு தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் போது ஆர்வம் அதிகரிக்கிறது' என்றார்.
இது குறித்து மேலும் சிலரிடம் கேட்டபோது படத்தில் வரும் "அதோ அந்த பறவை போல" என்னும் பாடலை கேட்கும் போது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடப்பட்ட பாடல்களை கேட்கும் உணர்வு வெளிப்படுகிறது என தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தை காண தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இத்திரைப் படம் நேற்று மூன்று தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அன்னை ஆபிராமி தியேட்டரில் இப்படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இப்படத்தை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் இப்படத்தை காண வந்திருந்தனர். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு வெளியே டிஜிட்டல் பேனர்களையும் வைத்திருந்தனர்.

இப்படத்தை காண வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த என்.சந்திரபாபு என்பவர் கூறுகையில், கடந்த 1966 ஆம் ஆண்டு மேகலா தியேட்டரில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை 100 முறைக்கும் மேல் இப்படத்தை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு அலுக்கவே இல்லை. இத்தியேட்டரில் இருந்து இப்படத்தை மாற்றுவதற்குள் 10 முறையாவது பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன் என்றார்.
தாமஸ் மலையை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் கூறுகையில் 'என்னிடம் இப்படத்தின் சிடி இருக்கிறது. இருந்தாலும் மற்ற ரசிகர்களோடு தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் போது ஆர்வம் அதிகரிக்கிறது' என்றார்.
இது குறித்து மேலும் சிலரிடம் கேட்டபோது படத்தில் வரும் "அதோ அந்த பறவை போல" என்னும் பாடலை கேட்கும் போது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடப்பட்ட பாடல்களை கேட்கும் உணர்வு வெளிப்படுகிறது என தெரிவித்தனர்.
Friday, April 6, 2007
நா.காமராசன் அவர்களுக்கு
சமீபத்தில் திரு.நா.காமராசன் அவர்கள் குமுதம் இதழில் எம்.ஜி.ஆர். பற்றி குறிப்பிடும் போது பாடலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் ஒரு கிங் என்று கருணாநிதி அவர்கள் சொன்னதாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த தனக்கு எம்.ஜி.ஆர். தீவிர அரசியல் ஈடுபாடு ஏற்பட்ட பின் வேண்டாத குணங்கள் அவரிடம் இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த குணங்கள் என்ன என்பதை சொல்லவில்லை. எனக்கு இதுவாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
(1) புகழ் வேண்டாத குணம்
(2) பணம் வேண்டாத குணம்
(3) பதவி வேண்டாத குணம்
என்று சொல்லி இருக்கலாம், முகவரி தந்தவரை முகஸ்துதி செய்ய சொல்லவில்லை நன்றி மறக்காமல் இருந்திருக்கலாம்.
(1) புகழ் வேண்டாத குணம்
(2) பணம் வேண்டாத குணம்
(3) பதவி வேண்டாத குணம்
என்று சொல்லி இருக்கலாம், முகவரி தந்தவரை முகஸ்துதி செய்ய சொல்லவில்லை நன்றி மறக்காமல் இருந்திருக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)

